பள்ளிதலைமையாசிரியர்கள் முடிவெடுக்கலாம்.ஆட்சியர் அறிவிப்பு.

by Editor / 24-11-2023 08:34:05am
பள்ளிதலைமையாசிரியர்கள் முடிவெடுக்கலாம்.ஆட்சியர் அறிவிப்பு.

திருநெல்வேலி மாவட்டத்தில்  இன்று (24.11.2023) வெள்ளிக்கிழமை ஒரு சில பகுதிகளில் அதிக மழை பெய்யலாம் என வானிலை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

எனவே தங்கள் பகுதியில் அதிக மழைப்பொழிவு இருந்தாலோ, பள்ளி வளாகத்தில் மழை நீர் தேங்கி இருந்து வகுப்புகள் நடத்த உகந்த சூழல் இல்லாத நிலை ஏற்பட்டாலோ அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் சூழ்நிலைக்கேற்ப முடிவு செய்து  பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க அனுமதி வழங்கப்படுகிறது.
இது தொடர்பாக கல்வி அலுவலரிடம் தொலைபேசியில்  தெரிவித்திடவும் அறிவுறுத்தப்படுகிறது.என 
 திருநெல்வேலி - மாவட்ட ஆட்சித் தலைவர்,விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

 

Tags : பள்ளிதலைமையாசிரியர்கள் முடிவெடுக்கலாம்.ஆட்சியர் அறிவிப்பு.

Share via