கரடி தாக்கியதில் பூங்கா ஊழியர் உயிரிழப்பு

by Staff / 28-11-2023 12:55:46pm
கரடி தாக்கியதில் பூங்கா ஊழியர் உயிரிழப்பு

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் இந்திரா காந்தி உயிரியல் பூங்காவில் கரடி தாக்கி, தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த ஊழியர் நாகேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கூண்டின் கதவுகள் திறந்திருப்பதை கவனிக்காத நாகேஷ், உள்ளே சென்று தூய்மை பணியில் ஈடுபட்ட நிலையில், கரடி சரமாரியாக தாக்கியுள்ளது. உடனடியாக கரடியிடம் இருந்து அவரது உடல் மீட்கப்பட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் கருணைத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via