பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
பெங்களூரு நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு ஒரே நேரத்தில் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இந்த மிரட்டலால் பதற்றம் அடைந்த பள்ளிகளின் ஆசிரியர்கள் மாணவர்களை உடனடியாக வெளியேற்றினர். இது குறித்து தகவலறிந்த கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமாரும் தனது வீட்டின் அருகே உள்ள பள்ளிக்கு சென்று விசாரணை மேற்கொண்டார். மேலும் மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளிகளின் முன் திரண்டதால் பெங்களூரு முழுவதும் சலசலப்பு ஏற்பட்டது.
Tags :