அடுத்த 3 மணி நேரத்திற்குள் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு.

by Editor / 06-12-2023 09:39:08am
அடுத்த 3 மணி நேரத்திற்குள் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு.

தமிழகத்தில் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு ஆகிய 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆந்திராவின் ஓங்கோல் அருகே பாபட்லா என்ற இடத்தில் மிக்ஜாம் புயல் கரையை கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த சூழலில் புயல் பாதிப்பில் இருந்து சென்னை நகரம் இன்னும் முழுமையாக மீளவில்லை. பல இடங்களில் இன்னும் மழை வெள்ளம் வடியாத சூழல் நிலவுவதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

 

Tags : தமிழகத்தில் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு ஆகிய 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆந்திராவின் ஓங்கோல் அருகே பாபட்லா என்ற இடத்தில் மிக்ஜாம் புயல் கரையை கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த சூழலில் புயல் பாதிப்பில் இருந்து சென்னை நகரம் இன்னும் முழுமையாக மீளவில்லை. பல இடங்களில் இன்னும் மழை வெள்ளம் வடியாத சூழல் நிலவுவதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Share via