பேனர் பலகை சரிந்து விழுந்து விபத்து- 3 பேர் மீது கொலை வழக்கு

by Staff / 02-06-2023 12:14:23pm
பேனர் பலகை சரிந்து விழுந்து விபத்து- 3 பேர் மீது கொலை வழக்கு

கோவை அருகே விளம்பர பேனர் பொருத்தும்போது 60 அடி உயர இரும்புத்தூண்கள் உடைந்து விழுந்து 3 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கோவை பேனர் பலகை சரிந்து விழுந்த விபத்து தொடர்பாக 3 பேர் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். ஒப்பந்ததாரர் பாலாஜி, பழனிச்சாமி மற்றும் நில உரிமையாளர் ராமசாமி மீது காவல் துறை கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via