தமிழகத்திற்கு ரூ.450 கோடி மத்திய அரசு ஒதுக்கீடு

by Staff / 07-12-2023 02:10:56pm
தமிழகத்திற்கு ரூ.450 கோடி மத்திய அரசு ஒதுக்கீடு

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டிற்கு ரூ.450 கோடி வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக, ரூ.5,060 கோடி வழங்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரியிருந்த நிலையில், முதற்கட்டமாக ரூ.450 கோடி மத்திய அரசு நிதி அறிவித்துள்ளது. மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பாதிப்புகளை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பார்வையிடும் சூழலில், தமிழகத்திற்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.450 கோடியை மத்திய அரசு வழங்குகிறது.

 

Tags :

Share via