பச்சிளம் குழந்தையை கொலை செய்த கொடூர தாய்

by Staff / 09-12-2023 04:30:27pm
பச்சிளம் குழந்தையை கொலை செய்த கொடூர தாய்

கேரளாவின் பட்டனம்திட்டா அருகே மேலவெட்டிப்புரம் பகுதியை சேர்ந்தவர் நீது (20). இவரும் திருச்சூரை சேர்ந்த இளைஞரும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் திருமணம் ஆகாமலே உல்லாசமாக இருந்த காரணத்தினால் கருத்தரித்த நீதுவிற்கு கடந்த வாரம் பெண் குழந்தை பிறந்துள்ளது. இது வெளியில் தெரிந்தால் அவமானம் என கருதிய அவர், குழந்தையின் முகத்தில் தண்ணீரை ஊற்றி மூச்சு திணறவைத்து கொலை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via