திருவண்ணாமலை விவசாயி மீது உள்நோக்குடன் குண்டாஸ்

by Staff / 22-12-2023 03:39:09pm
திருவண்ணாமலை விவசாயி மீது உள்நோக்குடன் குண்டாஸ்

நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில் திருவண்ணாமலை விவசாயி அருள் ஆறுமுகத்தின் மீது குண்டர் சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனையடுத்து அவர் மீதான குண்டாஸை ரத்து செய்யக்கோரி அவரது மனைவி தொறந்து வழக்கின் விசாரணையில் விவசாயி அருள் ஆறுமுகத்தின் மீது உள்நோக்கத்துடன் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் எந்த ஒரு தீவிர குற்றத்திலும் ஈடுபட்டதற்கான முகாந்திரம் இல்லாத நிலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது என நீதிபதிகள் கூறியுள்ளனர்.

 

Tags :

Share via