உயிரை பறித்த கள்ளத்தொடர்பு
உத்தரப்பிரதேச மாநிலத்தில் திருமணத்திற்கு புறம்பான உறவால் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொல்லப்பட்ட இளைஞருக்கு திருமணமான பெண்ணுடன் தொடர்பு இருந்து வந்துள்ளது. நள்ளிரவில் காதலியை பார்க்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அதே சமயம் தனிமையில் இருந்த இருவரையும், பெண்ணின் கணவர் வந்து கையும் களவுமாக பிடித்தார். தொடர்ந்து ஆத்திரமடைந்த பெண்ணின் கணவர், அந்த இளைஞரை கடுமையாக தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சாண்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட அடம்பூர் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
Tags :