மீண்டும் கன்னியாகுமரி, திருநெல்வேலி,தூத்துக்குடி மாவட்டங்களில் 31ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு

by Editor / 27-12-2023 02:22:25pm
மீண்டும் கன்னியாகுமரி, திருநெல்வேலி,தூத்துக்குடி மாவட்டங்களில் 31ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு

திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் டிசம்பர் 31ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

 

Tags : மீண்டும் கன்னியாகுமரி, திருநெல்வேலி,தூத்துக்குடி மாவட்டங்களில் 31ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு

Share via