ரொக்க தொகை குறித்து முதல்வர் முடிவெடுப்பவர் - உதயநிதி

by Staff / 03-01-2024 12:24:41pm
ரொக்க தொகை குறித்து முதல்வர் முடிவெடுப்பவர் - உதயநிதி

பொங்கல் தொகுப்புடன் ரொக்கத்தொகை வழங்குவது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார் என விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், கேலோ இந்தியா நிகழ்வுக்கு அழைப்பிதழ் வழங்க நாளை பிரதமரை சந்திக்கிறேன். அப்போது தமிழ்நாட்டிற்கு பேரிடர் நிவாரண நிதி பெறுவது குறித்தும் கோரிக்கை வைக்கப்படும். இளைஞர் அணி மாநாடு தேதி குறித்து ஆலோசித்து ஓரிரு நாட்களில் தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.

 

Tags :

Share via