அரசு மருத்துவமனையில் பிரசவத்தில் தாயும், குழந்தையும் சாவு
சேலம் கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்தவர் தாமரைச் செல்வன். லேத்தொழிலாளி. இவருக்கும், வெண்ணிலா (27) என்பவருக்கும் 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 4 ஆண்டுகளாக பிறகு வெண்ணிலா கர்ப்பம் ஆனார். குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர். இதற்கிடையே பிரசவ வலி ஏற்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு திடீரென வெண்ணிலாவுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. டாக்டர்கள் தொடர்ந்து அவருக்கு சிகிச்ச சிகிச்சை அளித்தனர். இருந்தும் வெண்ணிலாவும், அவரது குழந்தையும் பரிதாபமாக இறந்தனர். இதனால் வெண்ணிலாவின் கணவர் தாமரைச்செல்வன், அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். இதுதொடர்பாக கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து சேலம் உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
Tags :