சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே 12 பேர் உயிரிழந்தனர்
உத்தரபிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டத்தில் இன்று காலை 11 மணியளவில் பயங்கர விபத்து நடந்தது. அல்ஹகஞ்ச் பகுதியில் உள்ள சுகுசுகி திருப்பத்தில் டிரக் மோதியதில் டெம்போவில் பயணம் செய்த 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பனிமூட்டம் அதிகமாக இருந்ததால், எதிரே வந்த லாரி ஆட்டோ மீது மோதியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Tags :