பிப்.1-ம் தேதி முதல் மதுபானங்களின் விலை உயர்வு.

by Editor / 29-01-2024 10:08:48pm
பிப்.1-ம் தேதி முதல் மதுபானங்களின் விலை உயர்வு.

பிப்.1-ம் தேதி முதல் மதுபானங்களின் விலை உயர்த்தப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகம் அதிரடியாக அறிவித்துள்ளது. 180 மி.லி. அளவு கொண்ட சாதாரண, நடுத்தர ரக மதுபானங்களின் விலை ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது எனவும் 180 மி.லி. அளவு கொண்ட உயர் ரக மதுபானங்கள் விலை ரூ.20 உயர்த்தப்பட்டுள்ளது எனவும் டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் 375 மிலி, 750 மி.லி, 1000 மி.லி கொள்ளளவுள்ள மதுபான ரகங்களும் மற்றும் 325 மி.லி, 500 மி.லி கொள்ளளவுகளில் விற்கப்படும் பீர் வகைகளுக்கும் ரகத்திற்கு ஏற்றவாரு விலை உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிப்.1-ம் தேதி முதல் மதுபானங்களின் விலை உயர்வு.
 

Tags : பிப்.1-ம் தேதி முதல் மதுபானங்களின் விலை உயர்வு.

Share via