மீனவர்கள் தொடர் கைது - உயர்நீதிமன்றம் கேள்வி
சென்னை உயர்நீதிமன்றத்தில், இலங்கை கடற்படை, கைது செய்த மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று வழங்கப்பட்ட மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மீனவர்கள் கைது நடவடிக்கையை தடுக்க ஏன் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை? ஏன் இந்த நிகழ்வுகள் தொடர்ந்து நிகழ்கிறது? என கேள்வி எழுப்பினர். பின்னர், இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசு விளக்கமளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை மார்ச் 11ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
Tags :