நிச்சயமாக கரும்பு விவசாயி சின்னத்தை பெறுவோம் - சீமான்

by Staff / 17-02-2024 01:50:00pm
நிச்சயமாக கரும்பு விவசாயி சின்னத்தை பெறுவோம் - சீமான்

நிச்சயமாக கரும்பு விவசாயி சின்னத்தை பெறுவோம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், கரும்பு விவசாயி சின்னம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம். சட்டத்தின் படி, சட்ட வரைமுறையின்படி கரும்பு விவசாயி சின்னம் நாம் தமிழர் கட்சிக்கு தரப்பட்டிருக்க வேண்டும். திட்டமிட்டு கரும்பு விவசாயி சின்னம் மறுக்கப்பட்டு இருக்கிறது. சின்னம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம். நிச்சயமாக கரும்பு விவசாயி சின்னத்தை பெறுவோம் என கூறினார். முன்னதாக இந்த சின்னத்தில் கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி, நகர்புற தேர்தல்களில் நாதக போட்டியிட்டிருந்தது.

 

Tags :

Share via