மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற டிரைவர் மீது போலீசார் வழக்கு பதிவு

by Editor / 01-12-2022 09:30:29am
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற டிரைவர் மீது போலீசார் வழக்கு பதிவு

நாகர்கோவில் பரசேரியை சேர்ந்தவர் அஜித்குமார்.(49). இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ராணி தோட்டம் பணிமனையில் திமுக தொழிற்சங்கத்தை சேர்ந்த டிரைவராக பணியாற்றி வருகிறார்.இந்நிலையில் அவருக்கு பணி ஒதுக்கப்படாததால் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு தர்ணா போராட்டம் நடத்தினார். மேலும் கடந்த 10 தேதி குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். இந்நிலையில் நேற்று காலை நாகர்கோவில் மாவட்ட அலுவலக வளாகத்தில் மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவர் மீது நேசமணி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

 

Tags :

Share via