பரிசோதனை அடிப்படையில் அனுமதிக்கப்பட்ட ரயில் நிறுத்தங்கள் மறு அறிவிப்பு வரும் வரை தொடரும் ரயில்வே அறிவிப்பு

by Editor / 28-02-2024 08:12:36pm
பரிசோதனை அடிப்படையில் அனுமதிக்கப்பட்ட ரயில் நிறுத்தங்கள் மறு அறிவிப்பு வரும் வரை தொடரும் ரயில்வே அறிவிப்பு

மதுரை கோட்டத்தில் சில முக்கிய ரயில் நிலையங்களில் சில விரைவு ரயில்கள் பரிசோதனை அடிப்படையில் குறிப்பிட்ட காலத்திற்கு நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த வசதி மறு அறிவிப்பு வரும் வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாகர்கோயில் - மும்பை - நாகர்கோயில் ரயில் (16340/16339) கொடைக்கானல் ரோடு ரயில் நிலையத்திலும், மதுரை - புனலூர் - மதுரை ரயில் (16729/16730) கோவில்பட்டி மற்றும் சாத்தூர் ரயில் நிலையங்களிலும், திருச்சி - ராமேஸ்வரம் - திருச்சி ரயில் (16849/16850) கீரனூர் ரயில் நிலையத்திலும், தாம்பரம் - நாகர்கோவில் - தாம்பரம் அந்தியோதயா ரயில் (20691/20692) சாத்தூர் ரயில் நிலையத்திலும், ராமேஸ்வரம் - பெரோஸ்பூர் கன்டோன்மென்ட் - ராமேஸ்வரம் ரயில் (20497/20498) ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை ரயில் நிலையங்களிலும், ராமேஸ்வரம் - அயோத்தியா கண்டோன்மெண்ட் - ராமேஸ்வரம் ஷிரத்தா சேது ரயில் (22613/22614) காரைக்குடி மற்றும் ராமநாதபுரம் நிலையங்களிலும் மறு அறிவிப்பு வரும் வரை நின்று செல்லும். அதேபோல மதுரை - சென்னை - மதுரை வைகை எக்ஸ்பிரஸ் (12636/12635) ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்திலும், திருப்பதி - ராமேஸ்வரம் - திருப்பதி ரயில் (16779/16780) ஆரணி ரோட்டிலும் மறு அறிவிப்பு வரும் வரை நின்று செல்லும்.

 

Tags : பரிசோதனை அடிப்படையில் அனுமதிக்கப்பட்ட ரயில் நிறுத்தங்கள் மறு அறிவிப்பு வரும் வரை தொடரும் ரயில்வே அறிவிப்பு

Share via