போதைப்பொருள் விவகாரம் - மன உளைச்சலில் அமீர்
அமீர் இயக்கும் 'இறைவன் மிகப்பெரியவன்' படத்தை ஜாஃபர் சாதிக் தயாரித்து வந்த நிலையில், சில நாள்களுக்கு முன் போதைப்பொருள் கடத்தியதாக ஜாஃபர் சாதிக் தில்லியில் கைது செய்யப்பட்டார். இயக்குநர் அமீர் மீதும் விமர்சனங்கள் எழுந்தன. இதுபற்றி எதுவும் தெரியாது என்று ஏற்கனவே விளக்கம் அளித்த அமீர், தற்போது மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், என்னை இதுபோன்ற குற்றச் செயல்களோடு தொடர்புபடுத்தி பேசுவதனால் எனது பெயருக்கு கலங்கமும், எனது குடும்பத்துக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகிறீர்கள் என்று தெரிவித்துள்ளார்.
Tags :