சுற்றுலா வந்த ஜெர்மன் பயணியிடம் வழிப்பறி

by Staff / 25-05-2023 04:49:45pm
சுற்றுலா வந்த ஜெர்மன் பயணியிடம் வழிப்பறி

ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஃரைட்ரிச் வின்சென்ட் 23 வயது வாலிபர் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஏப்ரல் 24 ஆம் தேதி இலங்கை வழியாக விமானம் மூலம் சென்னை வந்துள்ளார். இரவு ஒரு மணிக்கு சாலையில் நடந்து சென்ற போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த இருவர் கையில் வைத்திருந்த கத்தியை காட்டி அவரின் லக்கேஜ்பேக் மற்றும் லேப்டாப்பை கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via