21 பேர்களின் சடலங்களை ஒரே இடத்தில் வைத்துஎரிக்கப்பட்டன.

கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்த 21 பேர்களின் சடலங்களை ஒரே இடத்தில் வைத்து எரிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. ஆனால், கனமழை பெய்த காரணத்தால் சடலங்களை எரிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. தொடர்ந்து, மழை நின்றவுடன் சடலங்கள் ஒவ்வென்றாக எரிக்கப்பட்டன. தொடர்ந்து, பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.
Tags : 21 பேர்களின் சடலங்களை ஒரே இடத்தில் எரிக்கப்பட்டன.