ஆசிரியர் முழு உடல் பரிசோதனை திட்டம்: அமைச்சர் அன்பில் மகேஸ்

by Staff / 02-03-2024 12:33:56pm
ஆசிரியர் முழு உடல் பரிசோதனை திட்டம்: அமைச்சர் அன்பில் மகேஸ்

தமிழகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் நலன்காக்கும் விதமாக 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் மருத்துவ பரிசோதனை செய்யப்படும் என்று முதல்வர் மு. க. ஸ்டாலின் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிவிப்பை வெளியிட்டார்.பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் 37, 588 அரசுப் பள்ளிகளில் 2 லட்சத்து 24, 035 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இவர்களில் 50 வயதுக்கு மேற்பட்ட 1. 06 லட்சம் ஆசிரியர்களுக்கு மட்டும் தற்போது முதல்கட்டமாக முழு உடல் பரிசோதனை மேற்கொள்ள பள்ளிக்கல்வித் துறை அனுமதி வழங்கியுள்ளது.

 

Tags :

Share via