மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கட்டடத்தை தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

by Admin / 04-03-2024 09:03:08am
மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கட்டடத்தை தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

இன்று மயிலாடுதுறையில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கட்டடத்தை தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.. 114 கோடி 48 லட்சம் மதிப்பில் மன்னம்பந்தல் ஊராட்சி மூங்கில் தோட்டம் பால்பண்ணை பகுதியில் கட்டப்பட்டுள்ள அலுவலக கட்டடத்தை இன்று காலை 10 மணிக்கு திறந்து வைப்பதற்காக நேற்று மாலை 4:15 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் மூலமாக  சென்ற முதல்வர் சீர்காழியில் இருந்து கார் மூலமாக தனது மாமனார் ஊரான திருவெண் காட்டில் தங்கிய முதல்வர் காலை கார் மூலம் மயிலாடுதுறை சென்று மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலக விழாவில் பங்கேற்கிறார். பின்னர் திருச்சி சென்னை சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலில் திரும்பி 7.45 மணி அளவில் சென்னைக்கு திரும்புகிறாா். ..

 

Tags :

Share via