பிரதமரின் பேச்சுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி

by Staff / 05-03-2024 12:31:07pm
பிரதமரின் பேச்சுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி

மத்திய அரசு நிதி தராத போதும் மாநில அரசு மக்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ததை கூட மோடி அறியவில்லையா என அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பதிவில், 2014ல் தேர்தலுக்கு முன்பு "சுவிஸ் வங்கியிலிருக்கும் கருப்பு பணத்தை கொண்டுவந்து மக்களின் வங்கி கணக்குகளில் போடுவேன்" என்று சொன்ன மோடி அவர்களின் ஆட்சியில் பெரும் பணக்காரர்கள் வங்கியில் பல்லாயிரம் கோடி கடன் வாங்கி, எந்த சிரமமும் இன்றி நாட்டைவிட்டு தப்பி செல்ல உதவியதே அவரது சாதனை. லோக்பால் சட்டத்தால் உருவான அமைப்பு கடந்த பத்து ஆண்டுகளில் இன்று வரை ஒரு வழக்கில் கூட குற்றத்தை நிருபிக்கவில்லை. மோடி அவர்களாலேயே ஊழல் வாதிகள் என குற்றம் சாட்டபட்டவர்கள் பாஜகவில் சேர்ந்ததும் அஸ்ஸாமிலும், மகாராஷ்டிராவிலும் அவராலேயே முதல்வராக்கப்பட்டனர். இப்படி ஒரு ஊழல் "ஒழிப்பு" சாதனை வரலாற்றை வைத்திருக்கும் மோடி அவர்கள் திமுகவை நோக்கி "ஊழல்வாதிகள்" என்று கூறவதை பார்த்து சிரிக்கத்தான் வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

 

Tags :

Share via