ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மர்ம மரணம்

by Staff / 05-03-2024 02:47:22pm
ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மர்ம மரணம்


கேரளவை சேர்ந்தவர் ஜெய்சன் தாமஸ் (44). இவர் தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் பூவரணி கொச்சுக்கொட்டாரம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இன்று காலையில் இவர்கள் அனைவரும் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். தாமஸ் தூக்கில் தொங்கிய நிலையிலும், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் படுக்கையில் ரத்தக்காயங்களுடன் இறந்து கிடந்துள்ளனர். தனது மனைவி மற்றும் குழந்தைகளை கொன்றுவிட்டு, தாமஸ் தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

 

Tags :

Share via