திருமணம் ஆகாததால் விரத்தி - இளைஞர் தற்கொலை

by Staff / 09-03-2024 12:54:29pm
திருமணம் ஆகாததால் விரத்தி - இளைஞர் தற்கொலை

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் சதாசிவம். 33 வயதான இவர் கொத்தனார் வேலை செய்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இதனால் விரக்தியில் இருந்த சதாசிவம் வீட்டின் அருகே தென்னந்தோப்பில் உள்ள தென்னை மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via