பெங்களூரு குண்டுவெடிப்பு - தேடப்பட்டு வந்த நபர் கைது

கர்நாடக மாநிலம், பெங்களூருவில் ராமேஸ்வரம் கஃபே ஹோட்டலில் குண்டுவெடித்த வழக்கில் சந்தேகத்திற்குரிய நபராக தேடப்பட்டு வந்த ஷபீர் என்பவரை பெல்லாரியில் வைத்து என்ஐஏ கைது செய்துள்ளது. அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெங்களூரில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவில் கடந்த மார்ச் 1ஆம் தேதி வெடிகுண்டு வெடித்தது. குண்டு வெடித்த நபரின் புகைப்படங்கள் சிசிடிவியில் பதிவாகியிருந்தன. அவரை தேடி வந்த நிலையில் இன்று என்ஐஏ கைது செய்துள்ளது.
Tags :