அரசு பள்ளியில் கோடை விடுமுறை மே. 1 முதல் துவங்குகின்றது.

by Editor / 16-03-2024 10:18:25am
அரசு பள்ளியில் கோடை விடுமுறை மே. 1 முதல் துவங்குகின்றது.

புதுச்சேரி மாநிலத்தில் அரசு பள்ளிகள் இந்த கல்வியாண்டு முழுமையாக மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது.வரும் கல்வியாண்டு முதல் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் விதிமுறைகளின்படி பள்ளிகள் 2024 ஏப்.1 முதல் 2025 மார்ச் 31ந்தேதி வரை நடைபெறும் என்றும், மார்ச் 24 முதல் 31ந்தேதி வரை மற்றும் மே.1ந்தேதி முதல் 31ந்தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்பட்டு ஜுன் 3ந்தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.இதனையடுத்து வரும் 25ந்தேதி(மார்ச்) முதல் அரசுப்பள்ளியில் மாணவர் சேர்க்கை துவங்கப்படுகின்றது.

 

Tags : அரசு பள்ளியில் கோடை விடுமுறை மே. 1 முதல் துவங்குகின்றது

Share via