குழந்தை கடத்தலில் ஈடுபட்ட 2பேர் கைது; 4 குழந்தைகள் மீட்பு

by Staff / 19-03-2024 02:12:22pm
குழந்தை கடத்தலில் ஈடுபட்ட 2பேர் கைது; 4 குழந்தைகள் மீட்பு

தூத்துக்குடி மாநகரில் கடந்த 9ம் தேதி அந்தோணியார் கோவில் பகுதியில் சாலையில் ஒரங்களில் படுத்து உறங்கிய சந்தியா என்ற பெண்ணின் நான்கு மாத பெண் கைக்குழந்தையை மர் நபர்கள் கடத்திச் சென்றனர். இந்த சம்பவம் தமிழக மற்றும் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பபைஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் 10 தனி படைகள் அமைக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தூத்துக்குடி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மாவட்ட காவல்துறை சார்பில் குழந்தை கடத்தலில் ஈடுபட்ட கருப்பசாமி மற்றும் ராஜன் ஆகியோரின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டு தகவல் கொடுத்தால் உரிய சன்மானம் வழங்கப்படும் என காவல்துறை சார்பில் அறிவித்தனர். இதையடுத்து குழந்தை கடத்தலில் தொடர்புடைய ராஜன் மற்றும் கருப்பசாமியை தனிப்படை காவல்துறையினர் அவர்களிடம் இருந்து 4 குழந்தைகள் மீட்டு  அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

 

Tags :

Share via