லாரி கவிழ்ந்து விபத்து: 75 ஆடுகள் பலி

by Staff / 29-03-2024 05:37:18pm
லாரி கவிழ்ந்து விபத்து: 75 ஆடுகள் பலி

சிவகங்கையைச் சேர்ந்த நாகராஜ், தனக்கு சொந்தமான 200 செம்மறியாடுகளை லாரியில் ஏற்றிக்கொண்டு மேய்ச்சலுக்காக நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மணலூர் கிராமத்திற்கு வந்து கொண்டிருந்தார். மணலூர் மேலக்கரை சாலையில் லாரி வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் லாரியிருந்த ஆடுகள் கீழே விழுந்து லாரிக்கு இடையில் சிக்கின. இதில் 75க்கும் மேற்பட்ட ஆடுகள் உடல் நசுங்கி உயிரிழந்தன.

 

Tags :

Share via