ஓட்டுக்கு பணம் கொடுக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை அமைச்சர் ரகுபதி

by Staff / 31-03-2024 01:19:01pm
ஓட்டுக்கு பணம் கொடுக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை அமைச்சர் ரகுபதி

ஓட்டுக்கு பணம் கொடுக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 10 ஆண்டுகளாக அமைச்சராக இருக்கிறார். மாநிலங்களவை உறுப்பினர் ஊதியத்தில் இருந்து மாதம் ரூ.50 ஆயிரம் சேர்த்து வைத்திருந்தாலே தாராளமாக தேர்தலுக்குப் போதும். எனவே, அவர் சொல்வது பச்சைப் பொய் என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள். திமுக சார்பில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க மாட்டோம். எங்களின் வெற்றி உறுதி செய்யப்பட்டது. எனவே, வாக்குக்கு பணம் கொடுக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என்றார்.

 

Tags :

Share via