3வது முறையாக கட்டணத்தை உயர்த்தியுள்ள ஜியோ.

by Staff / 28-06-2024 05:11:07pm
3வது முறையாக கட்டணத்தை உயர்த்தியுள்ள ஜியோ.

டெலிகாம் நிறுவனங்கள் தற்போது மொபைல் ரீசார்ஜ்களுக்கு கட்டண உயர்வை அறிவித்துள்ளன. கடந்த 2016 ஜியோ தனது சேவையை அறிமுகப்படுத்திய பிறகு 2019-ல் முதல் முறையாக கட்டணத்தை உயர்த்தியது. முதல் முறையே 20% முதல் 40% வரை கட்டண உயர்வை அதிகரித்தது. பின்னர் 2021ல் மீண்டும் கட்டணத்தை உயர்த்தி இருந்தது. 3 ஆண்டுகள் கழித்து மீண்டும் 2024ல் 25% வரை கட்டண உயர்வை அறிவித்து இருக்கிறது. இந்த கட்டண உயர்வால் வரும் காலாண்டுகளில் ஜியோவின் தொழில் வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
 

 

Tags :

Share via