திருப்பூரில் கோலாகலம் காந்திய வேட்டி நூற்றாண்டு விழா

by Editor / 23-09-2021 04:09:28pm
திருப்பூரில் கோலாகலம் காந்திய வேட்டி நூற்றாண்டு விழா



ராம்ராஜ்‌ காட்டன்‌ நிறுவனம்‌ சார்பில்‌ மகாத்மா காந்தி வேட்டிக்கு மாறியதன்‌ நூற்றாண்டு விழா திருப்பூர்‌ அம்மாபாளையத்தில்‌ உள்ள கருணையம்மாள்‌ திருமண மண்டபத்தில்‌ நடைபெற்றது.


நிகழ்ச்சிக்கு ராம்ராஜ்‌ காட்டன்‌ நிறுவனர்‌ கே.ஆர்‌.நாகராஜன்‌ தலைமை வகித்தார்‌. ராம்ராஜின்‌ வெண்மை மாத இதழ்‌ சார்பில்‌ “மகாத்மாவைக்‌ கொண்டாடுவோம்”‌ என்ற நூலை கோவை ரூட்ஸ்‌ குழுமங்களின்‌ தலைவர்‌ கே.ராமசாமி வெளியிட பாரதிய வித்யா பவன்‌ கோவை மையத்தின் தலைவர்‌ பி.கே.கிருஷ்ணராஜ்‌ வாணவராயர்‌ பெற்றுக்‌ கொண்டார்.


100 சுதந்திர போராட்ட தியாகிகளின்‌ குடும்பத்தினர்கள்‌ மற்றும்‌ 100 நெசவாளர்களும் கௌரவிக்கப்பட்டனர்‌. அதனைத்‌ தொடர்ந்து சென்னை கலாகேஷேத்ரா குழுவினர்‌ வழங்கிய “காந்திய வழியில்‌ ராம்ராஜ்‌” என்ற விசேஷ நாட்டிய நாடகமும்‌ நடைபெற்றது.

 

Tags :

Share via