கணவனை வெட்டிக் கொன்ற மனைவி, மகன் தலைமறைவு
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தாண்டவராயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பண்ணன். இவரது மனைவி மாரியம்மாள். இவரது மகன் ராஜா. கருப்பண்ணனுக்கும் ராஜாவுக்கும் சொத்து தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாரியம்மாள் மற்றும் ராஜா சொத்து தகராறு காரணமாக கருப்பண்ணனை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். தொடர்ந்து அங்கிருந்து தப்பினர். இதுகுறித்த தகவல் அறிந்து வந்த ஆத்தூர் நகர போலீசார் கருப்பண்ணன் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags :