கள்ளக்காதலை கண்டித்த உறவினர் குத்தி கொலை

by Staff / 05-04-2024 01:17:02pm
கள்ளக்காதலை கண்டித்த உறவினர் குத்தி கொலை

சென்னை மாங்காடு அருகே ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் கட்டடப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் சோனியா என்பவருக்கும், அங்கு வேலை செய்த சுஷாந்தா பர்மனுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனையறிந்த சோனியாவின் உறவினர் மோகன் புஜகர் அவர்களை கண்டித்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த சுஷாந்தா பர்மனை, மோகன் புஜகர் மார்பில் கத்தியால் குத்திக் கொலை செய்தார். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் அவர்களை இன்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via