காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மக்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கை திருமாவளவன்

by Staff / 05-04-2024 03:28:49pm
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மக்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கை திருமாவளவன்

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கை அளிக்கிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் உள்ள அனைத்தும் சாத்தியமானது. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இந்தியா கூட்டணிக்கு மேலும் வலுசேர்க்கும். காங். தேர்தல் அறிக்கையில் இடஒதுக்கீடு 50% உச்சவரம்பை உயர்த்துவது விளிம்புநிலை மக்கள் வாழ்வை உயர்த்தும் என்று தெரிவித்தார்.
 

 

Tags :

Share via

More stories

Logo