காதலிக்கு தாலி கட்டிவிட்டு இளைஞர் தற்கொலை

by Staff / 05-04-2024 03:46:59pm
காதலிக்கு தாலி கட்டிவிட்டு இளைஞர் தற்கொலை

விழுப்புரத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் (27) என்பவரும், 26 வயது இளம்பெண்ணும் 10 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். தொடர்ந்து இளம்பெண் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்திய நிலையில் ராதாகிருஷ்ணன் அவரை ஏப்ரல் 3ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 4) அதிகாலை ராதாகிருஷ்ணன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் எழுதிய கடிதத்தில் தன்னை கட்டாயப்படுத்தி திருமணம் செய்துவைத்தாகவும், தற்கொலைக்கு அப்பெண்ணின் வீட்டார் தான் காரணம் எனவும் குறிப்பிட்டுள்ளார்

 

Tags :

Share via