ஜப்பானில் 4 வது முறையாக இன்று நிலநடுக்கம்
ஜப்பானின் கியுஷூ (Kyushu) வட்டாரத்தின் தென் கடலோரத்தை இன்று (ஏப்ரல் 8) 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உலுக்கியுள்ளது. கடந்த 3ஆம் தேதி தைவான் நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த பூகம்பம் ஜப்பானிலும் உணரப்பட்ட நிலையில், ஜப்பான் நாட்டின் ஹோன்ஷு கிழக்கு கடலோர பகுதியில் 2 வது முறையாக கடந்த 4 ஆம் தேதி காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவானது. மேலும் கடந்த 6 ஆம் தேதி ஜப்பானின் ஹோன்ஷு நகரில் 3 வது முறையாக இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது . இது ரிக்டர் அளவில் 5.4ஆக பதிவாகியது. இந்நிலையில், 4 வது முறையாக இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
Tags :