மனைவி மீது பொய் குற்றச்சாட்டு - கணவருக்கு நூதன தண்டனை

by Staff / 09-04-2024 01:04:28pm
மனைவி மீது பொய் குற்றச்சாட்டு - கணவருக்கு நூதன தண்டனை

பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தைச் சேர்ந்தவர் பரீத் காதர். இவருக்கு இவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பரீத் காதர் விவாகரத்துப் பெற்றார். மேலும், அவர்களது குழந்தைகளுக்கு தான் தந்தை இல்லை என கூறி மனைவி மீது குற்றம் சாட்டியுள்ளார். இதனால், அவரது மனைவி போலீசில் புகார் அளித்தார். போலீசாரின் விசாரணையில் மனைவி மீது பரீத், பொய் குற்றச்சாட்டு வைத்தது தெரியவந்தது. இதனால், அவருக்கு நூதன தண்டனை வழங்க நீதிமன்றம் முடிவு செய்து, பரீத்துக்கு 80 சவுக்கடிகள் வழங்கப்பட்டன.

 

Tags :

Share via