பெட்ரோல் குண்டு வீச்சில் மேலும் ஒருவர் கைது

by Staff / 11-04-2024 12:29:53pm
பெட்ரோல் குண்டு வீச்சில் மேலும் ஒருவர் கைது

கோவை சேரன்மாநகர் பகுதிக்கு அருகேுகே உகே உள்ள வினோபாஜி நகரை சேர்ந்தவர் வரதராஜன் (25). இவர் நேற்று முன்தினுன்தினம் இரவு விளாங்குறிச்சி ரோட்டில் ஒரு டாஸ்மாக் கடை அருகேயுள்ள ஒரு பெட்டிக் கடையயில் சிசிகரெட் ் வாங்குவதற்காக சென்றுள்ளார். அப்போது அந்த பெட்டிக்கடைக்காரர் கிரேடன் பெர்னான்டஸ் (42) என்பவருக்கும் வரதராஜனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அவர் சிகரெட் தர மறுத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த வரதராஜன் தன் நண்பர்கள் 2 பேரை அழைத்து வந்து, அந்த பெட்டி கடைக்காரரை மிரட்டினார். நான் சிகரெட் கேட்டா தர மாட்டியா, உன் கடை இருக்காது பார் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் நிரம்பி தூக்கி வீசியுள்ளார். பாட்டில் தவறி அந்த பகுதியில் உள்ள ஒரு ஓட்டல் கடை மீது விழுந்தது. பெட்டி கடை மீதும் தீ பரவியது. இதில் அதிர்ச்சியடைந்த பெட்டிக்கடை உரிமையாளர் உடனடியாக கடையில் இருந்து வெளியேறி தப்பித்தார். இந்த சம்பவம் குறித்து பீளமேடு போலீசில் புகார் தரப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வரதராஜனை கைது செய்தனர். இதில் அவரின் கூட்டாளியான பால் துரை (25) என்பவரை நேற்று கைது செய்தனர். மேலும், அறிவழகன் என்பவரை தேடி வருகின்றனர்

 

Tags :

Share via