ஏடிஎம்-ல் ரூ.13 லட்சம் திருட்டு

by Staff / 11-04-2024 02:33:07pm
ஏடிஎம்-ல் ரூ.13 லட்சம் திருட்டு

சென்னை தாம்பரம் அருகே இயங்கி வரும் சவுத் இந்தியன் வங்கி ஏடிஎம் இயந்திரத்தில், பணம் வரவில்லை என வாடிக்கையாளர்கள் வங்கியில் புகார் அளித்தனர். 2 தினங்களுக்கு முன்பு தான் ரூ.23 லட்சம் பணம் நிரப்பியதால் வங்கி அதிகாரிகள் குழப்பமடைந்தனர். உடனே சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்ததில் இயந்திரத்தில் நம்பர் லாக் போடப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் இயந்திரத்தில் இருந்து ரூ.13 லட்சத்து 3 ஆயிரத்து 200 திருடுபோனதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via