காலிக் குடங்களுடன் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம்
தமிழ்நாட்டில் இன்று (ஏப்ரல் 19) நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நாகப்பட்டினம் மாவட்டம் புதிய நம்பியார் நகர் பகுதி மக்கள் தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவில்லை என கூறி காலிக் குடங்களுடன் தேர்தல் புறக்கணித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் சிவகங்கை இளையன்குடி கிராம மக்களும் தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Tags :