நாளை டாஸ்மாக் மற்றும் இறைச்சிக் கடைகள் இயங்காது

by Staff / 20-04-2024 02:41:53pm
நாளை டாஸ்மாக் மற்றும் இறைச்சிக் கடைகள் இயங்காது

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலையொட்டி கடந்த 3 நாட்களாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் இன்று (ஏப்ரல் 20) மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளதால் கூட்டம் அலைமோதி வருகிறது. இந்நிலையில் நாளை (ஏப்ரல் 21) சமண சமயத்தின் முக்கிய பண்டிகையான மகாவீரர் ஜெயந்தி கொண்டாடப்படுவதால் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தமிழகம் முழுவதும் இறைச்சிக் கடைகளும் நாளை இயங்காது.

 

Tags :

Share via
Logo