மதுரை மீனாட்சி,, இராமேஸ்வரம் கோவிலில் பயங்கரவாத தடுப்பு ஒத்திகை
மதுரை மீனாட்சி அம்மன் கோவில், இராமேஸ்வரம் இராமநாதசாமி கோவிலில் தேசிய பாதுகாப்பு படையினர் நள்ளிரவில் தீவிரவாத தடுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். இதனை அப்பகுதி பொதுமக்கள் பார்வையிட்டனர். எதோ ஒரு சூழ்நிலையில் பயங்கரவாத தாக்குதல் கோவில்களில் நடத்தப்படும் பட்சத்தில், மக்களை காப்பாற்றுவது எப்படி என்பது தொடர்பாகவும் ஒத்திகை நடத்தப்பட்டது.சுமார் 150 க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் போது எப்படி செயல்படுவது, அவர்கள் பிணையக்கைதிகளாக மக்களை பிடித்து வைத்தால் எப்படி செயல்பட வேண்டும் என்பது தொடர்பாக ஒத்திகை நடத்தினர். அங்கு இருந்த மக்களிடம் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தும் சமயத்தில் எப்படி செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
Tags :