அரசுப் பேருந்து வாய்க்காலில் கவிழ்ந்து விபத்து - பெண் உயிரிழப்பு.
கும்பகோணத்தில் இருந்து அரசுப் பேருந்து ஒன்று இன்று காலை சுமார் 25 பயணிகளை ஏற்றிக்கொண்டு
தஞ்சாவூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அய்யம்பேட்டை அருகே, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அரசு பேருந்து சாலை ஒரம் இருந்த வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. உடனே பயணிகளை மீட்ட அப்பகுதி மக்கள், அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி லட்சுமி (50) என்பவர் உயிரிழந்தார். மேலும், 25க்கும் மேற்பட்ட பயணிகள் காயங்களுடன் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.விபத்து குறித்து அய்யம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags : அரசுப் பேருந்து வாய்க்காலில் கவிழ்ந்து விபத்து - பெண் உயிரிழப்பு.