தமிழர்களுக்குச் செய்கின்ற பச்சைத் துரோகம் சீமான்

by Staff / 04-05-2023 12:32:52pm
தமிழர்களுக்குச் செய்கின்ற பச்சைத் துரோகம் சீமான்

கர்நாடகா சட்டமன்றத் தேர்தலுக்கான தனது தேர்தல் அறிக்கையில் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு ரூ.9,000 கோடி நிதி ஒதுக்குவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அவரது அறிக்கையில், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதி தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கும் சூழ்ச்சியாகும். இதுதான் இந்தியாவின் ஒற்றுமையை காங்கிரஸ் கட்சி கட்டி காப்பாற்றுகின்ற ஆக்கப்பூர்வமான நடவடிக்கையா? இவற்றையெல்லாம் அனுமதித்துவிட்டு இந்தியாவின் ஒற்றுமை குறித்துப் பேச ராகுல் காந்திக்கு என்ன தகுதி இருக்கிறது என கேள்வியெழுப்பியுள்ளார்.

 

Tags :

Share via