சீனாவில் வரலாறு காணாத வெள்ளம் .. புயலில் சிக்கி 5 பேர் பலி

by Staff / 28-04-2024 12:38:33pm
சீனாவில் வரலாறு காணாத வெள்ளம் .. புயலில் சிக்கி 5 பேர் பலி

தெற்கு சீனாவில் உள்ள குவாங்செளவை நகரை தாக்கிய புயலுக்கு 5 பேர் பலியாகினர். மேலும், 33 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு பல நாள்களாக பெய்த பலத்த மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தால், பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு குவாங்சௌவில் ஏப்ரலில் அதிகப்படியான மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.

 

Tags :

Share via