1 மணி நேரத்தில் குற்றவாளிகளை பிடிக்கலாம்: R.B உதயகுமார்

by Staff / 09-05-2024 04:48:17pm
1 மணி நேரத்தில் குற்றவாளிகளை பிடிக்கலாம்: R.B உதயகுமார்

நெல்லையில் காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்ம மரணம் குறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்பி உதயகுமார், “ஜெயக்குமாரின் மரணம் கொலையா? தற்கொலையா? என்கிற முடிவுக்கே வர முடியாமல் காவல்துறை திணறி வருகிறது. காவல்துறையின் மெத்தனமா? அரசியல் குறுக்கீடா? இல்லை வேறு ஏதேனும் அழுத்தமா? எனத் தெரியவில்லை. காவல்துறையை சுதந்திரமாக விட்டால் ஒரு மணி நேரத்தில் குற்றவாளிகளை கண்டுபிடித்து விடுவார்கள். ஆனால் இன்றைக்கு காவல்துறை செயலிழந்து உள்ளது” என விமர்சித்தார்.

 

Tags :

Share via

More stories

Logo