சவுக்கு சங்கரை பரிசோதிக்க நீதிமன்றம் உத்தரவு

by Staff / 15-05-2024 04:19:52pm
சவுக்கு சங்கரை பரிசோதிக்க நீதிமன்றம் உத்தரவு

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கரை, இன்று(மே 15) பெண் காவலர்கள் வேன் மூலம் திருச்சி மகளிர் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர். வரும் வழியில் மகளிர் காவலர்கள் தன்னை வேனில் வைத்து அடித்து, மன்னிப்பு கேட்க வைத்து வீடியோ எடுத்ததாக சவுக்கு சங்கர் நீதிபதிகளிடம் புகார் கூறினார். இந்த நிலையில் அவருக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டுள்ளதா? என்பதை மருத்துவர்கள் சோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

Tags :

Share via