போலி ஆதார் அட்டையுடன் இருந்த 3 இளைஞர்கள் கைது

by Staff / 18-05-2024 04:14:49pm
போலி ஆதார் அட்டையுடன் இருந்த 3 இளைஞர்கள் கைது

பின்னலாடை ஏற்றுமதியை பொறுத்தவரை நமது திருப்பூருக்கும் வங்கதேசத்திற்கும் இடையே பெரும் போட்டியே நிலவுகிறது. இந்நிலையில், வங்கதேசத்தைச் சேர்ந்த 3 இளைஞர்கள் போலி ஆதாருடன் திருப்பூரில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரூபேஷ், நஸ்ரூல், இஸ்லாம் ஆகியோர் பிடிபட்டனர். திருப்பூருக்கு அவர்கள் எதற்காக வந்தார்கள், போலி ஆதார் அட்டையை பெற்றது எப்படி என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via

More stories